Saturday 9 April 2011

வீடு சுமந்து அலைபவன்

சிறகு முளைக்குமுன்பே
பறக்கத் தொடங்கியாயிற்று

சைதாப்பேட்டை
மேட்டுப்பாளையம்
சானடோரியம்
இப்போது ஆதம்பாக்கம்

முதலில் கைப்பை
அடுத்து தானி
பின் குட்டியானை
இப்போது 407

வீட்டைச் சுமந்து திரிந்தாயிற்று
வேலையும் வேலை நிமித்தமும்
எங்கள் ஆறாம் திணை

வரலாறுகளை வரப்பில் சுமந்திருக்கும்
வளமான மண்
வாழ்க்கையை வாய்க்காலில் நிறைத்திருக்கும்
வற்றாத கிணறு
சோகத்தை விதைத்ததால்
இன்பத்தையே விளைவிக்கும் இல்லம்
குளோரின் கலக்காத குடிநீர்
குப்பைகளைச் சுமக்காத காற்று
எல்லாமும்தான் இருக்கிறது ஊரில்

இருந்துமென்ன---
இருந்தது இல்லாமல் போகும்போதும்
இருப்பு இடம் மாறிப் போகும்போதும்தான்
உறைக்கிறது

ஏதிலிகளின் வலி

No comments:

Post a Comment