இப்போதெல்லாம் இதே போராட்டம்
‘கொஞ்சம் வளைந்து கொடு , உன்னைக்
கோபுரத்தில் ஏற்றுகிறேன் என்கிறது 'அறிவு'
‘ஒடிந்து போனாலும் , இதனால்
உயிர் ஒழிந்து போனாலும்
வளைந்து கொடுக்க வாய்ப்பே இல்லை’என்கிறது 'மனது'
இப்போதெல்லாம் இதே போராட்டம்...
பழகாமல் இருந்திருக்கலாமோ!?
‘பழியெனின் உலகு உடன் பெறினும் கொள்ளார்’