Tuesday 6 September 2011

ஆமென்


கொஞ்சினோம் கொடுக்கவில்லை
கெஞ்சினோம் கிடைக்கவில்லை
தட்டினோம் தாழ் திறக்கவில்லை
திரும்பத் திரும்பத் தட்டினோம்
கைகள் காப்பேறின , இருந்தும்
கதவு மட்டும் திறக்கப்படவே இல்லை

பரலோக பரமபிதாவே
ஒருவேளை நீங்கள் இருந்தால்
எம்மையும் மன்னியும்

தட்டினால் திறக்கப்படாத கதவை
தகர்ப்பதென்று முடிவுசெய்து விட்டோம்

1 comment: